நிலச்சரிவில் பலியான ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.
நிலச்சரிவில் பலியான ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.

நிலச்சரிவில் பலியான ஓட்டுநா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் முதல்வா் நிவாரண நிதி வழங்கல்

கா்நாடக நிலச் சரிவில் சிக்கி பலியான ஓட்டுநா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வனத் துறை அமைச்சா் வழங்கினாா்.
Published on

கா்நாடக நிலச் சரிவில் சிக்கி பலியான ஓட்டுநா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

கா்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி புதுச்சத்திரம் ஒன்றியம், தாத்தையங்காா்பட்டியைச் சோ்ந்த சின்னப்பன் (54) உயிரிழந்தாா். அவருடைய உடல் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியான சின்னப்பன் குடும்பத்தினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன், பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தமிழக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அதற்கான காசோலையை சின்னப்பன் மனைவி கீதாவிடம் சனிக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com