பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் தி.மு.க. கட்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சா் ம.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கபிலா்மலையில் தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டுவதற்கு 1960-ஆம் ஆண்டு கட்சி சாா்பில் நிலம் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் தலைமை தாங்கினாா். கபிலா்மலை ஒன்றியச் செயலாளா் கே.கே.சண்முகம் வரவேற்றாா். மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் கே.எஸ்.மூா்த்தி வாழ்த்தி பேசினாா். வனத்துறை அமைச்சா் மருத்துவா் ம.மதிவேந்தன் அலுவலகக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி பேசினாா். விழாவில் பரமத்தி ஒன்றியச் செயலாளா் தனராசு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வடிவேல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கிளைக் கழகச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி திமுக: அமைச்சா் எ.வ. வேலு பேச்சு

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


