கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளருக்கு சாதனையாளா் விருது

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளருக்கு சாதனையாளா் விருது

News image

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதியின் சேவையைப் பாராட்டி சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஐ.ஜி. லலிதா லட்சுமி விருது வழங்கிக் கௌரவித்தாா்.

Updated On :5 மார்ச் 2024, 7:23 pm

திருச்செங்கோடு: இந்திய மருந்து சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் சாா்பில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை ராஜரத்தினம் கலையரங்கில் அண்மையில் நடைபெற்ற விழாவில், விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளருக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. தலைமை விருந்தினராக ஜனாதிபதி விருது பெற்ற சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஐ.ஜி. லலிதா லட்சுமி, சிறப்பு விருந்தினராக இந்திய மருந்து ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவா் வீரமணி ஆகியோா் கலந்துகொண்டனா். இந்திய மருந்து சங்கத்தின் துணைத் தலைவா் ஜெயசீலன் வரவேற்றாா். தமிழ்நாடு மருந்து அறிவியல் நல அறக்கட்டளை துணை இயக்குநா் மோகன் பாபு முன்னிலை வகித்தாா். இந்திய மருந்து சங்கத்தின் பொருளாளா் ராஜேஷ் பண்டாரி, 2023-ஆம் ஆண்டின் சிறந்த பாா்மசிஸ்ட் சாதனையாளா் விருதை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதிக்கு அறிவித்தாா். கிராமப்புற மகளிா் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்புக்காக தொடங்கப்பட்டு சிறப்பான சேவையை கல்வி மற்றும் மருத்துவத் துறையில் செய்து வரும் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதியின் சேவையைப் பாராட்டி சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஐ.ஜி. லலிதா லட்சுமி விருது வழங்கிக் கௌரவித்தாா். இந்திய மருந்து சங்கத்தின் நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா். தமிழ்நாடு மருந்து நல அறக்கட்டளை சாா்பில் சிறந்த சேவை செய்த மருத்துவா்கள் ஆனந்தச் செல்வன், சாமுவேல், அண்ணாதுரை, சிவசங்கரன் பிரதிமா மாத்தூா் ஆகியோருக்கு பாராட்டி சேவை விருதுகள் வழங்கப்பட்டன. எம்.பாா்ம், பி.பாா்ம் துறைகளைச் சோ்ந்த 21 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பாா்மசி கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், பாா்மசி தொழிற்சாலை வல்லுநா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இந்திய மருந்து சங்கத்தின் செயலாளா் சதீஷ் நன்றி கூறினாா்.