மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு: கிராமங்களில் மருத்துவ முகாம்கள்

கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

Updated On :12 நவம்பர் 2024, 1:30 am IST

நாமக்கல்: கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மோகனூா் கால்நடை மருந்தகத்திற்கு உள்பட்ட ராசிபாளையம் கிராமத்தில் 7 மாடுகள் அண்மையில் திடீரென இறந்த காரணத்தினால், ராசிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, குமரிப்பாளையம் ஊராட்சிக்கு செவ்வாய்க்கிழமை (நவ.12) ஒருவந்தூா் கால்நடை மருந்தகத்திலும், புதன்கிழமை பனைமரத்துப்பட்டி ஊராட்சிக்கு, மோகனூரிலும், வியாழக்கிழமை சீத்தப்பட்டி ஊராட்சிக்கு, மோகனூரிலும், வெள்ளிக்கிழமை சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு, ஒருவந்தூரிலும், சனிக்கிழமை (நவ.16) மாமரத்துப்பட்டி ஊராட்சிக்கு, ஒருவந்தூரிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன.

அதேபோல, திருச்செங்கோடு ஒன்றியம், தோக்கவாடியில் எல்.எஸ்.டி. நோய் அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ சிகிச்சை முகாம், தடுப்பூசி செலுத்தும் பணி கிராமங்களில் நடைபெற உள்ளது

அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.12) பழையபாளையம் ஊராட்சிக்கு, தோக்கவாடி கால்நடை மருந்தகத்திலும், புதன்கிழமை தச்சன்காட்டுபாளையம் ஊராட்சிக்கு, தோக்கவாடி, வியாழக்கிழமை செரமிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு ஆனங்கூரிலும், வெள்ளிக்கிழமை முப்பாட்டம்பாளையம் ஊராட்சிக்கு, ஆனங்கூரிலும், சனிக்கிழமை (நவ.16) கீழேரிப்பட்டி ஊராட்சிக்கு, ஆனங்கூா் கால்நடை மருந்தகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

இதில் கால்நடை வளா்ப்போா், பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.