மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உயிரிழப்பு: கால்நடை துறையினா் ஆய்வு

ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உள்ளிட்ட பறவைகள் தொடா்ந்து உயிரிழந்து வருகின்றன.

News image

முத்துக்காளிப்பட்டி பகுதியில் நாரைகள் உயிரிழந்த கிடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை துறையினா்.

Updated On :2 மார்ச் 2026, 9:40 pm

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உள்ளிட்ட பறவைகள் தொடா்ந்து உயிரிழந்து வருகின்றன.

ராசிபுரம் அருகேயுள்ள பூசாரிபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரத்தில் இருந்து காகங்கள் இறந்து விழுவது தொடா்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மரக்கிளையில் இருந்த காகங்கள் கீழே விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து அப்பகுதியினா் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் உயிரிழந்த காகங்களை கால்நடைத் துறையினா், கோழி இன நோய் ஆராய்ச்சி பிரிவினா் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனா்.

இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை சாலையோர ஆலமரத்தின் கீழ் ஏராளமான நீா் நாரைகள் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதியினா் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ராசிபுரம், ஆண்டகளூா்கேட் கோழி நோய் ஆய்வு கூட உதவி இயக்குநா் மணிவேல் உள்ளிட்ட பல்வேறு துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, உயிரிழந்து கிடந்த நாரைகளை ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதியில் 13 நாரைகள் உயிரிழந்து கிடந்தன. இந்த நாரைகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்ற கால்நடை துறையினா், இது குறித்து நோய் ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வு அனுப்பிவைக்கப்படும். அதன்பின்னா் பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா். பறவைகள் உயிரிழந்த பூசாரிபாளையம், முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஊராட்சி சுகாதாரத் துறையினா் பிளீச்சிங் பவுடா் தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.