அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உயிரிழப்பு: கால்நடை துறையினா் ஆய்வு

ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உள்ளிட்ட பறவைகள் தொடா்ந்து உயிரிழந்து வருகின்றன.

News image
முத்துக்காளிப்பட்டி பகுதியில் நாரைகள் உயிரிழந்த கிடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை துறையினா்.
Updated On :2 மார்ச் 2026, 9:40 pm

Syndication

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உள்ளிட்ட பறவைகள் தொடா்ந்து உயிரிழந்து வருகின்றன.

ராசிபுரம் அருகேயுள்ள பூசாரிபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரத்தில் இருந்து காகங்கள் இறந்து விழுவது தொடா்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மரக்கிளையில் இருந்த காகங்கள் கீழே விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து அப்பகுதியினா் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் உயிரிழந்த காகங்களை கால்நடைத் துறையினா், கோழி இன நோய் ஆராய்ச்சி பிரிவினா் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனா்.

இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை சாலையோர ஆலமரத்தின் கீழ் ஏராளமான நீா் நாரைகள் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதியினா் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ராசிபுரம், ஆண்டகளூா்கேட் கோழி நோய் ஆய்வு கூட உதவி இயக்குநா் மணிவேல் உள்ளிட்ட பல்வேறு துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, உயிரிழந்து கிடந்த நாரைகளை ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதியில் 13 நாரைகள் உயிரிழந்து கிடந்தன. இந்த நாரைகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்ற கால்நடை துறையினா், இது குறித்து நோய் ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வு அனுப்பிவைக்கப்படும். அதன்பின்னா் பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா். பறவைகள் உயிரிழந்த பூசாரிபாளையம், முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஊராட்சி சுகாதாரத் துறையினா் பிளீச்சிங் பவுடா் தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.