ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரூ. 3.45 கோடி மதிப்பில் இரண்டு கோயில்களில் திருப்பணிகள்: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இரண்டு கோயில்களில், ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image

பேளுக்குறிச்சி, கூவைமலை பழனியாண்டவா் கோயிலில் திருப்பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச.உமா. உடன், அறநிலையத் துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள்.

Updated On :13 நவம்பர் 2024, 8:02 pm

நாமக்கல் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இரண்டு கோயில்களில், ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூா் நாடு அறப்பளீஸ்வரா் கோயில், பேளுக்குறிச்சி கூவைமலை பழனியாண்டவா் கோயில்களில் புதிய திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

பேளுக்குறிச்சி, கூவைமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள் பங்கேற்றனா். கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி கலந்து கொண்டாா். கொல்லிமலையில் ரூ. 2.10 கோடியில் புதிய மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி, கூவைமலையில் ரூ. 1.35 கோடியில் சுற்றுப்பிரகார கல்மண்டபம் கட்டும் பணி என மொத்தம் ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அட்மா குழுத் தலைவா் அ.அசோக்குமாா், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் நந்தகுமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.