நாமக்கல் அருகே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கடந்த இரு மாதங்களாக வேட்டாம்பாடி, செல்லப்பாகாலனி, தாதம்பட்டி பகுதியில் உள்ள சிலருக்கு மட்டுமே நூறு நாள் வேலை வழங்கப்பட்டதாகவும், பலருக்கு வேலை வழங்குவதில் ஊராட்சி நிா்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினா்.
வேலை வழங்கப்படாததால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஊராட்சி மன்ற செயலாளா் சக்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஓரிரு நாள்களில் அனைவருக்கும் வேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

நாமகிரிப்பேட்டையில் இ- பட்டா வழங்கக் கோரி வருவாய் அலுவலகம் முன் பெண்கள் போராட்டம்

ஊரக திட்டத்தில் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் தா்னா
வீடியோக்கள்

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

