ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நவ. 23-இல் கிராமசபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில், 322 ஊராட்சிகளிலும் வரும் 22-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :14 நவம்பர் 2024, 8:03 pm

நாமக்கல் மாவட்டத்தில், 322 ஊராட்சிகளிலும் வரும் 22-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ. 1-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்தல், மகளிா் சுயஉதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலையளிப்பு திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.