நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 100 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் கிடங்கு ஒன்றில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும், மாநகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தக் கிடங்குக்கு ஆணையாளா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, மாநகராட்சி பணியாளா்கள் சென்று, 100 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். அவற்றை பதுக்கி வைத்திருந்த கௌதமன் என்பவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடையது
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

காரில் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


