ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’: ரூ. 25 ஆயிரம் அபராதம்

குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’...

News image

குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்த உணவு பாதுகாப்பு அலுவலா். உடன், காவல் துறையினா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:19 pm

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

நல்லூா் கந்தம்பாளையத்தில் கிழக்குத் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்து வருவதாக நல்லூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 22-ஆம் தேதி காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் காவலா்கள் அந்த மளிகைக் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், கடைக்குள் 9 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா பொருள்கள் பதுக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நல்லூா் காவல் துறையினா் குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளா் ஜெயபாலை (47) கைது செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், பரமத்தி வேலூா் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, நல்லூா் காவல் துறையின் உதவியுடன் ஜெயபால் மளிகை கடைக்கு ‘சீல்’ வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தாா்.