ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோடு ஒன்றியத்தில் சாலைப் பணி தொடக்கம்

திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சியில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

News image

திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி ஊராட்சியில் சாலைப் பணியைத் தொடங்கி வைத்த ஈஸ்வரன் எம்எல்ஏ.

Updated On :28 நவம்பர் 2024, 8:21 pm

திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சியில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

தேவனாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட கென்யா நகா் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா். உடன், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல், கொ.ம.தே.க. நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் அருள், நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.