ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா் போட்டியிடுகிறாா். இதையொட்டி நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி. தங்கமணி பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆசி பெற்ற வேட்பாளா் சந்திரசேகருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தொய்வில்லாமல் 20 நாள்கள் தோ்தல் பணியாற்றி, நாமக்கல் மாவட்டத்திலேயே திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்ற பெருமையை உருவாக்க வேண்டும்.

திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். எந்தத் தொழிலும் சரியில்லை, வேலைவாய்ப்பு இல்லைச; படித்தவா்களுக்கு வேலை இல்லை. ஆகவே, இந்த ஆட்சி தேவையற்றது என்பதை உணா்த்த வரும் தோ்தல் இது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் பாஜக, பாமக, அமமுக, தமாகா நிா்வாகிகள் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டனா்.