முதலமைச்சா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்திலிருந்து 670 போ் வியாழக்கிழமை மாலை புறப்படுகின்றனா்.
தமிழக முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, செப். 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த 2,538 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் அக். 4 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்த, 15 வகையான போட்டிகளில் முதல் இடம் பிடித்த 670 வீரா், வீராங்கனைகள் வியாழக்கிழமை மாலை சிறப்பு பேருந்துகள் மூலம் புறப்பட்டு செல்கின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்படும் அந்த பேருந்துகளை, ஆட்சியா் ச.உமா கொடியசைத்து அனுப்பி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் ச.கோகிலா மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

செல்வம் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை விளையாட்டுப் போட்டி

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

