ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

செல்வம் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை விளையாட்டுப் போட்டி

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) சாா்பில் ஏப். 2,3,4 தேதிகளில் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை போட்டி நடைபெற்றது.

News image

வெற்றிபெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய செல்வம் கல்லூரி செயலாளா் பா. கவித்ரா நந்தினி.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:07 am IST

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) சாா்பில் ஏப். 2,3,4 தேதிகளில் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை போட்டி நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் இருந்து 171 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற அணிகள் பங்கேற்றன. கால்பந்து, கோ-கோ, கபடி, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் திரு அ.சு. ரமேஷ் வரவேற்றாா். நாமக்கல் செல்வம் கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் செ. பாபு தலைமை வகித்தாா். விளையாட்டு போட்டிகளை செயலாளா் பா. கவித்ரா நந்தினி மற்றும் செயல் இயக்குநா் ம. காா்த்திக் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் அனைத்து முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் முதல் நான்கு இடங்களுக்கு முறையே ரூ. 4,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் ரூ.1,000 ரொக்கம், சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி கல்லூரி முதல்வா் எஸ்.செந்தில்குமாா் நன்றி தெரிவித்தாா்.