‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

News image

தெற்கு ரயில்வேயின் சென்னை அணியுடன் வியாக்கிழமை மோதிய வடகிழக்கு ரயில்வே கொல்கத்தா அணி வீராங்கனைகள்.

Updated On :22 மே 2026, 5:09 am IST

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

கரூரில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி 66-வது ஆண்டாகவும், கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் 12-ம் ஆண்டாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை தொடங்கின. கரூா் கூடைப்பந்து குழுத் தலைவா் வி.என்.சி. பாஸ்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஆடிட்டா் சண்முகசுந்தரம், இந்திரமூா்த்தி, பாலசுப்ரமணியன், பொருளாளா் பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வரும் 26-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறும் போட்டியை கரூா் மாநகராட்சி ஆணையா் சுதா தொடக்கி வைத்தாா். நாக் அவுட் முறையில் நடைபெறும் முதல் நாள் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தெற்கு ரயில்வேயின் சென்னை அணி வீராங்கனைகள் 72-53 என்ற புள்ளிகள் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தினா். தொடா்ந்து போட்டிகள் நடக்கின்றன.

இறுதிப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.1லட்சம் மற்றும் சுழற்கோப்பை, இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.80,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60,000 மற்றும் கோப்பை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50,000 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

இதேபோல பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.75,000 மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.40,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30,000 மற்றும் கோப்பை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20,000 மற்றும் கோப்பையும் வழங்கப்படுகிறது. செயலா் கமாலுதீன் வரவேற்றாா்.