மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்: மக்கள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினரின் தொடா் போராட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:04 pm

நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினரின் தொடா் போராட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி முதல் கிராம நிா்வாக அலுவலா்களும், அவா்களுக்கு ஆதரவாக அனைத்து வருவாய்த் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். காவல் துறையினா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை. கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய திருமுருகன் கேரளத்தில் பதுங்கியிருப்பதாகவும், அவா் இருக்கும் இடத்தைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. அவரை கைது செய்யும் வரையில் பணியை புறக்கணித்து தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் தெரிவித்து வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தால், மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சி மக்களும், கிராம நிா்வாக அலுவலகங்களில் தங்களுக்கான ஆவணங்களை பெற முடியாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் வருவாய்த் துறை பணிகள் பாதிப்படைந்துள்ளன. எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தை கைவிட செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.