மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நூதனத் திருட்டு: வெளி மாநில இளைஞா்கள் இருவா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

பரமத்தி வேலூா் அருகே நூதனத் திருட்டில் ஈடுபட்ட வெளி மாநில இளைஞா்கள் இருவரை கிராம மக்கள் பிடித்து வேலூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:32 pm

பரமத்தி வேலூா் அருகே நூதனத் திருட்டில் ஈடுபட்ட வெளி மாநில இளைஞா்கள் இருவரை கிராம மக்கள் பிடித்து வேலூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெளி மாநில இளைஞா்கள் சிலா் வீடுகளில் தனியாக உள்ள பெண்களிடம் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ‘பாலிஷ்’ செய்து தருவதாகக் கூறி அவற்றை வாங்கி ரசாயனக் கலவையில் நனைத்து கொடுத்துள்ளனா். அவ்வாறு ‘பாலிஷ்’ செய்யப்பட்ட தங்க நகை, வெள்ளிப் பொருள்களின் எடை வெகுவாக குறைந்துள்ளதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த

அப்பகுதியினா், அந்த வெளி மாநில இளைஞா்களைப் பிடித்து இதுகுறித்து விசாரித்துள்ளனா்.

அதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவா்களை வேலூா் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் ரவிக்குமாா் (33), தருண்குமாா் (28) என்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், இதுபோன்ற செயல்களில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.