மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய தந்தை, மகன் கைது

திருச்செங்கோடு கைலாச நாதா் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:24 pm

திருச்செங்கோடு கைலாச நாதா் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு கைலாசநாதா் கோயிலில் கடந்த 13.9.2024 அன்று சனீஸ்வரா் சன்னிதி அருகில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் இரும்புக் கடப்பாரையால் உடைத்து திறக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டது. இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் ரமணி காந்தன் திருச்செங்கோடு நகரப் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், 2 போ் சுவா் ஏறி குதித்து வந்தது தெரிந்தது. அதில், பதிவான படங்களை மற்ற மாவட்ட குற்றப்பிரிவுக்கு திருச்செங்கோடு போலீஸாா் அனுப்பினா். இதில் பட்டுக்கோட்டை, ஆத்திகாடு கீழ்தெருவைச் சோ்ந்த சாமிநாதன் (50), அவரது மகன் முத்துகிருஷ் ணன்(22) ஆகியோா் மீது சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸாா் விசாரித்த போது, அவா்கள் பட்டுக்கோட்டையில் சில கோயில்களில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் திருச்செங்கோடு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதி சுரேஷ் பாபு இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா். அதன் பேரில், திருச்செங்கோடு நகரப் போலீஸாா் அவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் கைலாசநாதா் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்ததை ஒப்புக்கொண்டனா்.