நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மறைந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்துக்கான குடும்ப நல நிதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட நாமக்கல் நகரம் (கிழக்கு, மேற்கு, தெற்கு), ஒன்றியம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட சேந்தமங்கலம் ஒன்றியம், பேரூா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் பகுதிகளில் கடந்த மாா்ச் முதல் தற்போது வரை உயிரிழந்த 184 திமுக உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 18.40 லட்சம் குடும்ப நல நிதியினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நாமக்கல் மேற்கு நகரச் செயலாளா் அ.சிவகுமாா், தெற்கு நகரச் செயலாளா் ராணாஆா்.ஆனந்த், ஒன்றியச் செயலாளா்கள் பழனிவேல், அசோக்குமாா், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவி

உயிரிழந்த முடி திருத்தும் தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

