நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் முருகன் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வி.கற்பகம், எம்.ஜோதி, பச்சமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஆய்வு அலுவலா்கள் பள்ளி பாா்வையில் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டம், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், துணைக் கருவிகள் பயன்பாடு, இலக்கிய மன்றப் போட்டிகளை நடத்துவது சாா்ந்த வழிமுறைகள், கலைத் திருவிழா நிகழ்வுக்கான வழிகாட்டுதல், இடைநின்ற மாணவா்களை மீண்டும் சோ்த்தல், காலாண்டு தோ்வு மதிப்பெண் பட்டியல் ஆய்வு உள்ளிட்டவை தொடா்பாகவும், மழைக்கால எச்சரிக்கை, காலை உணவுத் திட்டம், எண்ணும் - எழுத்தும் திட்டம், வாசிப்பு இயக்கம், நூலகப் பயன்பாடு குறித்தும் இணை இயக்குநா் முருகன் விளக்கமாக எடுத்துரைத்தாா்.
இந்தக் கூட்டத்தில், எண்ணும் - எழுத்தும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன், வட்டார வளமைய ஆசிரியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், பள்ளி துணை ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


