மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 அக்டோபர் 2024, 12:44 am

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவு காவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கொல்லிமலை வட்டத்தில் பணிபுரியும் வருவாய்த் துறையினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடியிருப்புகள் கட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் குடியிருப்பு கட்டித்தர உரிய வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீா்மானங்களை உடனடியாக செயல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா் ரா.சரவணகுமாா், செயலாளா் க.சதீஷ்குமாா், பொருளாளா் க.பாலசுப்பிரமணியம், மாவட்ட நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, செ.சிவகுமாா், செ.காா்த்திகேயன், ப.விஜயகுமாா், ச.மனோஜ், ச.ரஞ்சித், தே.மதுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.