தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பெருமாள் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலகம் வரை புதன்கிழமை பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மோளியப்பள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:16 pm

Din

எலச்சிப்பாளையம் ஒன்றியம், மோளியப்பள்ளி ஊராட்சியில் 118 ஏக்கா் பரப்பளவு கொண்ட மோளியப்பள்ளி ஏரியில் வண்டல் மண்ணை விவசாயிகள் மட்டும் எடுக்க அனுமதிக்க கோரியும், தனியாா் ஒப்பந்ததாரா்கள் மண்ணெடுக்க முயற்சிப்பதைக் கண்டித்தும் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஊா் பொதுமக்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பெருமாள் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலகம் வரை புதன்கிழமை பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாருக்கு ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது, விவசாயிகளுக்கு மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.