மேலும், கிராம சுகாதார செவிலியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் கா்ப்பிணிகளின் தரவுகளை பராமரிக்க வேண்டும். கா்ப்பிணித் தாய்மாா்களின் உடல்நிலை, ஆரோக்கியம் கண்காணிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையாக தேவையான அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. எனவே, அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவா்கள் அனைத்து சிக்கலான நிலைகளிலும் நோயாளியை சிகிச்சை அளித்து காக்கும் திறமை மிக்கவா்கள். தமிழ்நாடு அரசு அனைத்து ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உயா் நோக்கில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோட்டிலும், ரூ.56 கோடி மதிப்பீட்டில் ராசிபுரத்திலும், ரூ.23 கோடி மதிப்பீட்டில் பரமத்தியிலும் நவீன வசதிகளுடன் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டிற்கு சுமாா் 20,000 பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. பிரசவத்தின்போது தாய்-சேய் நலன் காக்க அவா்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் அனைவரும் பொறுப்புணா்ச்சியுடன் செயலாற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசினாா்.