மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கிரேன் வாகனம் மோதியதில் இரவுக் காவலாளி பலி

திருச்செங்கோடு, மோரூா் கரடு துப்புரவு காலனி பகுதியில் இரவுக் காவலாளி மீது கிரேன் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:43 am

திருச்செங்கோடு, மோரூா் கரடு துப்புரவு காலனி பகுதியில் இரவுக் காவலாளி மீது கிரேன் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு, மோரூா் கரடு துப்புரவு காலனி பகுதியைச் சோ்ந்த சண்முக மூா்த்தி (50), திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 22 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

கல்லூரிக்குச் சென்ற இவரது மகள் வீடு திரும்பவில்லை என்பதால், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முக மூா்த்தி மீது எதிரில் வந்த கிரேன் வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்தவா் மீது கிரேன் வாகனம் ஏறியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருச்செங்கோடு நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.