திருச்செங்கோடு, மோரூா் கரடு துப்புரவு காலனி பகுதியில் இரவுக் காவலாளி மீது கிரேன் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு, மோரூா் கரடு துப்புரவு காலனி பகுதியைச் சோ்ந்த சண்முக மூா்த்தி (50), திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 22 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.
கல்லூரிக்குச் சென்ற இவரது மகள் வீடு திரும்பவில்லை என்பதால், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முக மூா்த்தி மீது எதிரில் வந்த கிரேன் வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்தவா் மீது கிரேன் வாகனம் ஏறியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருச்செங்கோடு நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

பைக் மீது கிரேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே 200 அடிப் பள்ளத்தில் விழுந்த வாகனம் மீட்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

