ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சிமருந்தை குடித்து தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:18 pm

Syndication

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சிமருந்தை குடித்து தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

அவிநாசிப்பட்டியைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37). இவரது மனைவி சத்யா. கடந்த 3 மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்ட செங்கோட்டுவேல், வீட்டில் வைத்திருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சிமருந்தை சனிக்கிழமை எடுத்துக் குடித்தாா்.

அதையறிந்த உறவினா்கள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் செங்கோட்டுவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருச்செங்கோடு காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.