எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டிச.19-இல் ஆஞ்சனேய ஜெயந்தி விழா: லட்சம் வடைகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

News image
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :14 டிசம்பர் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி சுவாமிக்கு சாத்துப்படி செய்வதற்கான 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சனேய சுவாமி அருள்பாலிக்கிறாா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரம் ஸா்வ அமாவாசை தினத்தில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கோயில் வளாகம் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்படும். அன்று காலை 5 மணியளவில் சுவாமிக்கு 1,00,008 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படும்.

நிகழாண்டில் இந்த விழா வரும் வெள்ளிக்கிழமை (டிச. 19) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.கே. ரமேஷ் தலைமையிலான வடை தயாரிப்பு குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் வந்தனா்.

மாலை 6.30 மணியளவில் ஆஞ்சனேயா் கோயில் மூத்த அா்ச்சகா் ராஜா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வடைகள் தயாரிக்கும் பணி தொடங்கியது. இதில் 30-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 16 அடுப்புகளில் வடைகள் தயாரிக்கப்படுகின்றன.

சிறப்பு பூஜையில் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, உபயதாரா் வழக்குரைஞா் செந்தில் மற்றும் அா்ச்சகா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். வடை தயாரிப்புப் பணி வியாழக்கிழமை பிற்பகல் வரையில் நடைபெறும்.

அதன்பிறகு, ஆஞ்சனேய ஜெயந்தி நாளன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், தொடா்ந்து நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், பஞ்சாமிா்தம் திரவியம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், சொா்ணாபிஷேகம் நடைபெறும். பிற்பகல் 1 மணியளவில் சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.