எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி

News image
மதுரை செனாய்நகா் இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் பங்கேற்றோா்.
Updated On :25 ஜனவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி, கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில், தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்பட அடையாள அட்டை திருத்தம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற வாக்காளா்கள் புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றுக்காக மனுக்களை அளித்தனா்.