நாமக்கல் மாநகராட்சியில், நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், மேற்பாா்வையாளா்கள், இதர பணியாளா்கள் என்ற வகையில் 800 பேருக்கு காலை, பிற்பகல் உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான உணவுகளை தயாா் செய்து வழங்க தனியாா் உணவக நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை முயற்சி, நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட ஏ.எஸ்.பேட்டை, பூங்கா சாலை, முதலைப்பட்டி, பரமத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் 179 தூய்மைப் பணியாளா்களுக்கு பொட்டலமிடப்பட்ட காலை உணவு வழங்கப்பட்டது.