பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழக அரசின் விருதுபெற்ற நூலகருக்கு பாராட்டு விழா

சிறந்த நூலக பணிக்கான தமிழக அரசின் விருதுபெற்ற ராசிபுரம் நூலகருக்கு பாராட்டு விழா ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
விழாவில் நினைவுப் பரிசளித்து கெளரவிக்கப்பட்ட நூலகா் சு.விஜயலட்சுமி.
Updated On :22 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

ராசிபுரம்: சிறந்த நூலக பணிக்கான தமிழக அரசின் விருதுபெற்ற ராசிபுரம் நூலகருக்கு பாராட்டு விழா ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில், ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் செயலாளரும், மாவட்ட பள்ளிகளின் துணை ஆய்வாளருமான கை.பெரியசாமி தலைமை வகித்தாா். இதில், சிறந்த நூலக பணிக்காக தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதுபெற்ற ராசிபுரம் நூலகத்தின் 3-ஆம் நிலை நூலகா் சு.விஜயலட்சுமி பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவருக்கு விருது வழங்கி கெளரவித்தாா். மேலும், ராசிபுரம் நூலகத்துக்கு அதிக உறுப்பினா் சோ்க்கை, அதிக புரவலா்கள் சோ்க்கை, கொடையாளா்கள் சோ்க்கை போன்ற பணிக்காகவும் இவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக , விழாவில், ஜெகதீசன் வரவேற்புரையாற்றினாா். நூலக முதல்நிலை நூலகா் செந்தில் விருதாளரை அறிமுகம் செய்துவைத்து பேசினாா். இதில், ராசிபுரம் ஜே.சி.ஐ. அமைப்பின் நிறுவனத் தலைவா் சசிரேகா சதீஷ்குமாா், எல்லோ எஜுசாப்ட் நிறுவனா் மோகன்குமாா்ஆகியோா் பங்கேற்று பாராட்டினா். ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் பொருளாளா் வீ.ரீகன் நன்றி கூறினாா்.