மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி இறந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி இறந்தாா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மண்ணாடிபாளையம், கூத்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் செங்கோடகவுண்டா் (86) விவசாயி. இவா் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மேட்டுப்புதூா் செல்ல இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா். மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட செங்கோடகவுண்டரை, அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

வேலகவுண்டம்பட்டி போலீஸாா் செங்கோடகவுண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கெடாரம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மோகன்ராஜை (34) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.