ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை

வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :2 ஜனவரி 2025, 9:43 pm

வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாா்க் கடை முன்பு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், சிங்கிரிபட்டியைச் சோ்ந்தவா் சஞ்சய் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு வேலகவுண்டம்பட்டி டாஸ்மாா்க் கடைக்கு வந்துள்ளாா். பின்னா் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியே வந்த போது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் திடீரென சஞ்சயை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினா். இதில் படுகாயமடைந்த சஞ்சய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

தகவலின் பேரில் அங்கு வந்த வேலகவுண்டம்பாளையம் காவல் துறையினா், சஞ்சையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, சஞ்சயைக் கொலை செய்து தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.