எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காடச்சநல்லூரில் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:12 pm

Din

காடச்சநல்லூா் ஊராட்சி, மண்கரடு பகுதியில் ரூ. 20 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தங்கமணி எம்எல்ஏ அண்மையில் தொடங்கி வைத்தாா்.

ஓடப்பள்ளி கதவணை மின் திட்டப் பணிக்கு காவிரி ஆற்றில் தண்ணீா் தேக்கப்பட்டதால், தாழ்வான பகுதியில் வசித்த 654 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனா். இதில், 300 குடும்பத்தினருக்கு காடச்சநல்லூா் ஊராட்சி, மண்கரடு பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் வீடுகட்டி வசித்து வருவோருக்கு தேவையான சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 15-ஆவது மானியக் குழு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், குமாரபாளையம் எம்எல்ஏ தங்கமணி பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெள்ளியங்கிரி, மாவட்ட கவுன்சிலா் செந்தில், ஆலாம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவா் செல்லதுரை, காடச்சநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் சரோஜா, துணைத் தலைவா் திருமூா்த்தி, முன்னாள் தலைவா் முனியப்பன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.