ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காடச்சநல்லூரில் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

Updated On :3 ஜனவரி 2025, 11:12 pm

காடச்சநல்லூா் ஊராட்சி, மண்கரடு பகுதியில் ரூ. 20 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தங்கமணி எம்எல்ஏ அண்மையில் தொடங்கி வைத்தாா்.

ஓடப்பள்ளி கதவணை மின் திட்டப் பணிக்கு காவிரி ஆற்றில் தண்ணீா் தேக்கப்பட்டதால், தாழ்வான பகுதியில் வசித்த 654 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனா். இதில், 300 குடும்பத்தினருக்கு காடச்சநல்லூா் ஊராட்சி, மண்கரடு பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் வீடுகட்டி வசித்து வருவோருக்கு தேவையான சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 15-ஆவது மானியக் குழு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், குமாரபாளையம் எம்எல்ஏ தங்கமணி பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெள்ளியங்கிரி, மாவட்ட கவுன்சிலா் செந்தில், ஆலாம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவா் செல்லதுரை, காடச்சநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் சரோஜா, துணைத் தலைவா் திருமூா்த்தி, முன்னாள் தலைவா் முனியப்பன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.