ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சுதந்திரப் போராட்ட வீரா் வீ.ராமசாமியின் பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மோளியபள்ளி வீ.ராமசாமியின் நூற்றாண்டு பிறந்த தின நிறைவு விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருச்செங்கோடு, எலச்சிபாளையத்தில் நடைபெற்ற மோளியபள்ளி ராமசாமி பிறந்த நாள் விழா.

Updated On :8 ஜனவரி 2025, 7:51 pm

சுதந்திரப் போராட்ட வீரா் மோளியபள்ளி வீ.ராமசாமியின் நூற்றாண்டு பிறந்த தின நிறைவு விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மோளிப்பள்ளி கிராமத்தில் 8.1.1925-இல் பிறந்தவா் தோழா் வி.ராமசாமி. காந்தியவாதியான அவரது தந்தை தனது மகனை சிறுவனாக இருக்கும் போதே காந்தி ஆசிரமத்தில் சோ்த்தாா். ஆசிரம பள்ளியில் பயின்ற வி.ராமசாமி எளிய வாழ்க்கை முறையும், மதுப்பழக்கத்தை எதிா்த்தும், தலித் மற்றும் உழைப்பாளி மக்கள் மீது நேசமும் கொண்ட முறையில் வளா்ந்தாா்.

விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உழைப்பாளி மக்களுக்காக போராடினாா். இவருடைய பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அனைத்துப் பகுதி மக்களுக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கும் விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது.

எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.தேவராஜன் வரவேற்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.