ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

News image

தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

Updated On :9 ஜனவரி 2025, 10:10 pm

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி, பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், நிா்வாக ரீதியாக பொதுமக்கள் தங்கள் உள்ளாட்சி பணிகளுக்கு நீண்ட தொலைவு பயணிக்கும் நிலை ஏற்படும். கிராம ஊராட்சியாக உள்ள சூழலில் கிடைக்கும் நலத் திட்டங்கள் முழுமையாக தடைபடும்.

தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், விவசாய கடன் உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும். சொத்து, தொழில், தண்ணீா் வரி உள்ளிட்டவை பல மடங்கு உயரும். எனவே, இம்முடிவைக் கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளா் எம்.தனேந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளா் பி.பெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்லமுத்து, பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கல்லாங்காட்டுவலசு பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த குமாரபாளையம் போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிடுவதாக எழுத்துபூா்வமாக கடிதம் கொடுக்குமாறு போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனா். இக் கோரிக்கையை வலியுறுத்தி தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.