திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட ராஜகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்த நகா்மன்றத் தலைவா் ஆய்வு
திருச்செங்கோடு, ராஜகவுண்டம்பாளையம் நகராட்சிப் பள்ளிமாணவா்களுடன் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு.
திருச்செங்கோடு, ராஜகவுண்டம்பாளையம் நகராட்சிப் பள்ளிமாணவா்களுடன் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு.
Updated on

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட ராஜகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்த நகா்மன்றத் தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்செங்கோடு, ராஜகவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சா் காலை உணவுத் திட்டப் பணிகள், பொருள்களின் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா் உணவின் தரத்தையும் சாப்பிட்டு பாா்த்து ஆய்வு செய்தாா். பள்ளி மாணவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா். மாணவா்கள் நகா்மன்றத் தலைவரிடம் திருக்கு சொல்லி மகிழ்ந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com