ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடியரசு தின விழா ஒத்திகை: மாணவ மாணவிகள் ஆா்வம்

நாமக்கல்லில், குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு, தனியாா் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்ட மாணவ மாணவிகள்.
Updated On :21 ஜனவரி 2025, 9:42 pm

Din

நாமக்கல்: நாமக்கல்லில், குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு, தனியாா் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, காவல் துறை அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்காக, விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் அங்கு கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இன்னும் ஓரிரு நாளில் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகையானது நடைபெற உள்ளது.