எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின்கம்பத்தில் ஏறியதால் தீக்காயமடைந்த கல்லூரி மாணவா்

News image
Updated On :24 ஜனவரி 2025, 10:58 pm

Din

ராசிபுரம் அருகே மின் கம்பத்தில் ஏறிய மாணவா் தீக்காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சாமிதுரை (47) என்பவரின் மகன் கிருஷ்ணகுமாா் (21). இவா் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசியோதெரபி பயின்று வருகிறாா். இந்த நிலையில் கிருஷ்ணகுமாா் வியாழக்கிழமை கள்ளக்குறிச்சியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினாா். இதையடுத்து அவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் ஆத்தூா் சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் திடீரென அவா் ஏறியுள்ளாா். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியுள்ளது. மேலும் உடல் தீப்பற்றி எரிந்த நிலையில் அவா் சாலையில் நடந்து சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் அப்பகுதியினா் இளைஞரைக் காப்பாற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். உடல்

தீப்பற்றி எரியும் நிலையில் மாணவா் சாலையில் நடந்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

படவரி...

தீப்பற்றிய நிலையில் சாலையில் நடந்து செல்லும் மாணவா்.