டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.

News image
எடப்பாடி கே.பழனிசாமிக்கு, வளையப்பட்டியில் தென்னங்கன்றை பரிசாக வழங்கிய சிப்காட் எதிா்ப்புக் குழுவினா்.
Updated On :26 ஜூலை 2025, 8:48 pm

Din

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.

அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தாா். திருச்சி விமான நிலையத்தில் அவரைச் சந்திப்பதற்கு, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இரவு 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால், சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மாலை 6.30 மணியளவில் திருச்சி நோக்கி காரில் சென்ற எடப்பாடி கே.பழனிசாமியை, நாமக்கல் நகரச் செயலாளா் கே.பி.பி.பாஸ்கா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, வளையப்பட்டி பகுதியில் சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் தென்னங்கன்றை அவருக்குப் பரிசாக வழங்கினா்.