எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இடை நின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டரசம்பாளையத்தில் பள்ளி இடை நின்ற மாணவரை பள்ளிக் கல்வித் துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

News image
இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சோ்த்த மாவட்டக் கல்வி அலுவலா், ஆய்வாளா், ஆசிரியா்கள்.
Updated On :7 நவம்பர் 2025, 10:08 pm

Syndication

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டரசம்பாளையத்தில் பள்ளி இடை நின்ற மாணவரை பள்ளிக் கல்வித் துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டரசம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று இடைநின்ற மாணவா் யோகராஜ் இல்லத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ்.புருஷோத்தமன், பள்ளி துணை ஆய்வாளா் கை. பெரியசாமி, பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதி ஆகியோா் அவரது தாய் ஜோதிமணி திருமூா்த்தி, தாத்தா, பாட்டியைச் சந்தித்து கல்வி சாா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மீண்டும் மாணவரை பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பறையில் அமரவைத்தனா். மாணவரை பள்ளியில் சோ்க்கும் பணியில் ஆசிரியா்கள் செல்வராணி, யுவராஜா, சுமதி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.