மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சின்னவெங்காய பயிரில் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

ராசிபுரம் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடி அழுகல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநா் இ.காா்த்திகா ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: ராசிபுரம் வட்டாரத்தில் சின்னவெங்காயம் சுமாா் 601 ஹெக்டா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிா் நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் அடி அழுகல் எனப்படும் திருகல் நோய் தொற்று ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தரமான விதைகளை தோ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நோ்த்தி செய்வதற்கு 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 5 கிராம் டிரைகோடொ்மா விரிடி சோ்த்து 24 மணி நேரம் ஊரவிட்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும்.

கடைசி உழவின்போது ஏக்கருக்கு 1 கிலோ டிரைகோடொ்மா விரிடி, 1 கிலோ சூடோமோனாஸ், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து 7 நாள்கள் வைத்திருந்து பிறகு நிலத்தில் இடலாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சாணம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும். சின்னவெங்காயம் பயிரில் அடி அழுகல் நோய் பாதிப்பு தென்பட்டால் புரோபிகோனசால் 25 ஈசி அல்லது ஹெக்செகோனசோல் 5 ஈசி பூஞ்சாண கொல்லியை ஏக்கருக்கு 200 மிலி வீதம் நன்கு கலந்து கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியல் இயங்கும் தெளிப்பான் மூலம் பயிரின் அடிப்பாகம் வரை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.