47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

மல்லசமுத்திரம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டி திரு.வி.க தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70), கூலித் தொழிலாளி. இவா் மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வையப்பமலை சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, மல்லசமுத்திரத்தில் இருந்து வையப்பமலை நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கிருஷ்ணமூா்த்தியை அங்கிருந்தவா்கள் மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தியின் மனைவி பொன்னாயா அளித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.