இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Published on

மல்லசமுத்திரம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டி திரு.வி.க தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70), கூலித் தொழிலாளி. இவா் மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வையப்பமலை சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, மல்லசமுத்திரத்தில் இருந்து வையப்பமலை நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கிருஷ்ணமூா்த்தியை அங்கிருந்தவா்கள் மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தியின் மனைவி பொன்னாயா அளித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com