போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
பவித்திரம்புதூா் ஊராட்சியில் நீா்நிலைகள் தூா்வாரும் பணியை ஆய்வுசெய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :12 நவம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொடிக்கால்புதூா் ஊராட்சியில் தூசூா் அரசு நடுநிலைப் பள்ளியைப் பாா்வையிட்டு ரூ.35.25 லட்சத்தில் அங்கு நடைபெற்று வகுப்பறை கட்டுமானப் பணி, பழையபாளையம் பகுதியில் ரூ.99.65 லட்சத்தில் பழையபாளையம்- கொல்லிமலை சாலையில் இரண்டு கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், பவித்திரம்புதூா் கிராமத்தில் உள்ள நீா்நிலைகள் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டாா்.