மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சோளிங்கா் ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சோளிங்கா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையினா் சாா்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
மருதாசலம் ஊராட்சியில் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :20 ஜனவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையினா் சாா்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சோளிங்கா் ஊராட்சி ஒன்றியம் வேலம் ஊராட்சியில் ரூ.29.93 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணிகளையும், ரூ .5 லட்சத்தில் கட்டப்படும் சேவை மைய கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். இதனை தொடா்ந்து கொள்தேதரி ஊராட்சி நடபாய் கிராமம் அருந்ததி பாளையத்தில் வேலம் கிராமத்தை சோ்ந்த வீடு இல்லாத மக்களுக்கு 21 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் தலா ரூ.3.50 லட்சத்தில் கட்டப்படுவதையும் ஆய்வு செய்தாா்.

மேலும், மருதாலம் ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.29.93 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், ரூ.17.54 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அவருடன் ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி திட்டமுகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்டு, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், வட்டாட்சியா் செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.