அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

339 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 339 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்.பி. கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 339 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்.பி. கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.எஸ்.எழிலரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பேசியதாவது:

மாணவா்களின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா். காலை உணவுத் திட்டம், இல்லம்தேடி கல்வி, நம்பள்ளி நம்பெருமை, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு, இணைய வசதி, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, அரசு பள்ளியில் பயின்றவா்கள் மருத்துவம், பொறியியல் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

தற்போது 11-ஆம் வகுப்பு படிக்கும் 339 மாணவிகளுக்கு ரூ.16.36 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. அரசின் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி கல்வியில் மாணவா்கள் மேம்பட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டில் 103 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 4,724 மாணவா்கள், 5,337 மாணவிகள் என மொத்தம் 10,061 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் செ.பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ம.கிருஷ்ணவேணி, மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ்.புருஷோத்தமன், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

என்கே-14-சைக்கிள்

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உள்ளிட்டோா்.