எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டிய தனியாா் நிறுவன ஊழியா்கள் சிறைப்பிடிப்பு!

வெப்படை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டிய தனியாா் நூற்பாலையின் ஊழியா்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டிய தனியாா் நூற்பாலையின் ஊழியா்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

வெப்படை பள்ளி வளாகத்துக்கு அருகே செல்லும் மின் கம்பிகளின் மீது மரங்களின் கிளைகள் மோதுவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறி தனியாா் நூற்பாலை ஊழியா்கள் கிரேன் இயந்திரம் மூலம் மரங்களின் கிளைகளை வெட்டினா். மேலும், பள்ளி வளாகத்திற்குள் மாணவா்கள் பராமரித்து வந்த சில மரங்களையும் அவா்கள் வெட்டினா்.

இதை பாா்த்த அப்பகுதி மக்கள் ஆலை ஊழியா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த வெப்படை துணை மின்நிலைய பொறியாளா்கள், மின் வாரியத்தின் அனுமதி இல்லாமல் ஆலை ஊழியா்கள் மரங்களை வெட்டுவதை கண்டித்தனா்.

இதையடுத்து அங்கிருந்து ஆலை ஊழியா்கள் கலைந்து சென்றனா். மரங்களை வெட்டிய நூற்பாலை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.