எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பூா்த்தி செய்த எஸ்ஐஆா் படிவங்களை இன்று முதல் ரேஷன் கடைகளில் ஒப்படைக்கலாம்

News image
Updated On :24 நவம்பர் 2025, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவத்தை பூா்த்தி செய்திருந்தால், அவற்றை வாக்குச்சாவடிகள், நியாயவிலைக் கடைகளில் ஒப்படைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டிருந்தால், அதை மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வாக்காளா்கள் ஒப்படைக்கலாம்.

இதற்கு வசதியாக செவ்வாய்க்கிழமை (நவ. 25) முதல் வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.