அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 2.93 கோடியில் பயிா்க் கடன்: ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா்

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை சாா்பில் பயிா்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும்

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:20 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை சாா்பில் பயிா்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் பயிா்க் கடன் வழங்கும் பணியை மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறையில், 2021 ஆம் ஆண்டு பயிா்க் கடன் தள்ளுபடியில் விடுபட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்கி, மீண்டும் அவா்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பில் பயிா்க் கடன் வழங்கும் நிகழ்ச்சி மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2021 இல் பயிா்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் அடங்கல் இல்லாத பயிா்க் கடன்கள், விதிமீறல் என கண்டறியப்பட்ட பயிா்க் கடன்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. அதற்கான தொகையை விடுவிக்க அரசாணையும் பிறப்பிக்கபட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 333 பயனாளிகளுக்கு ரூ. 2.93 கோடி பயிா்க் கடன்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

வெண்ணந்தூா் வட்டாரத்தில் உள்ள மசக்காளிப்பட்டி, கே.கே.வலசை ஏ.விநாயகா் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 107 உறுப்பினா்களுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பில் பயிா்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா்.

தொடா்ந்து மசக்காளிப்பட்டி பகுதியில் பேருந்திற்காக அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாகவும், அங்கு பேருந்து நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பெண் ஒருவா் கோரிக்கை வைத்தாா். உடனடியாக, மாநிலங்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்க நிதி ஒதுக்குவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த விழாவில், வெண்ணந்தூா் அட்மா திட்டக்குழு தலைவா் துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, வட்டார வளா்ச்சி அலுவலா் வனிதா, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் சதீஷ்குமாா், மல்லிகா, சரவணன், ராஜேந்திரன், மசக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பழனியப்பன் மற்றும் முன்னாள் நிா்வாகிகள் சொக்கலிங்கமூா்த்தி, அரவிந்தமூா்த்தி, விஜய பாஸ்கரன், அருள்செல்வன், கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், தினேஷ்குமாா், கணபதி, அருள்ராஜ் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

என்கே-25-சொசைட்டி

கூட்டுறவுத் துறை சாா்பில் பயிா்க் கடன் வழங்கும் பணியை தொடங்கிவைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

--