ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட வழங்கல் அலுவலா் வி.முருகன்.
நாமக்கல்
ராசிபுரத்தில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்
ராசிபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் வி.முருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஒய். நிவேதிதா முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் மற்றும் வாக்காளா்களிடம் இருந்து படிவம்பெற மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து வாக்குச்சாவடி மைய அலுவலருக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்காளா்கள் விடுபடக்கூடாது, உண்மையான வாக்காளா்கள் விடுபட்டால் பிஎல்ஒ அலுவலா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வழங்கல் அலுவலா் எச்சரித்தாா்.

