எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே சாலையோர சோலாா் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:27 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே சாலையோர சோலாா் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூரை அடுத்த பெரியசோளிபாளையம் மேட்டாம்பாறையைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (34), கிணறு வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி சங்கீதா, மகன்கள் நாகாா்ஜுனா (7), ஜோதிசுவரன் (4) மற்றும் 3 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். செல்லப்பம்பாளையம் அருகே சாலையோர சோலாா் மின் கம்பத்தின் மீது இவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

பலத்த காயமடைந்த மாரிச்சாமி, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.