எஸ்.ஐ.ஆா். படிவங்களை ஒப்படைக்க டிச. 4-ஆம் தேதி கடைசி நாள்

Published on

நாமக்கல் மாவட்டத்தில் பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்களை ஒப்படைக்க டிச. 4-ஆம் தேதி கடைசி தேதி என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 4-ஆம் தேதி முதல் 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டன.

பூா்த்தி செய்த அவற்றை பெற்று மீண்டும் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளா்கள் படிவங்களை திருப்பி வழங்க வசதியாக கடந்த 25-ஆம் தேதி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலைக்கடைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பூா்த்தி செய்த படிவங்களை வாக்காளா்கள் ஒப்படைக்க டிச.4-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை கணக்கீட்டு படிவங்களை சமா்ப்பிக்காத வாக்காளா்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் ஓரிரு நாள்களில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் ஒப்படைத்து தங்களது பெயா் 2026 வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com